2012-02-25 14:17:57

திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளில் 400 விழுக்காடு அதிகரிப்பு


பிப்.25,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் Twitter இணையதளப் பக்கத்தைப் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை, 24 மணி நேரங்களுக்குள் 400 விழுக்காடு அதிகரித்திருப்பதாகத் திருப்பீட சமூகத் தொடர்பு அவை அறிவித்தது.
திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இவ்வியாழனன்று 2,500 ஆக இருந்தது, ஆனால் இவ்வெள்ளியன்று இவ்வெண்ணிக்கை, 12,500க்கும் அதிகமாகி இருப்பதாக அவ்வவை கூறியது.
இது மிகவும் வியப்பாக இருக்கின்றது என்றுரைத்த திருப்பீட சமூகத் தொடர்பு அவையின் செயலர் பேரருட்திரு Paul Tighe, இவ்வெண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, இவர்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் எண்ணிக்கையும் கூடியிருப்பதாகக் கூறினார்.
இவ்வெண்ணிக்கை அதிகரிப்பு, தவக்காலத் தொடக்கத்தோடு சேர்ந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், ஜெர்மானியம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் வெளிவரும் திருத்தந்தையின் செய்திகளை, via@Pope2YouVatican என்ற முகவரியில் பார்க்கலாம். இது போர்த்துக்கீசியத்தில் விரைவில் வெளிவர இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.