2012-02-24 15:06:30

கருத்தடை குறித்த ஒபாமாவின் நடவடிக்கை, சமய சுதந்திரத்தின் மீதான வரலாற்றுத் தாக்குதலின் தொடக்கம் - கர்தினால் டோலன்


பிப்.24,2012. கருத்தடை செய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா வழங்கியுள்ள காப்பீட்டுச் சலுகைத் திட்டம், சமய சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் வரலாற்றுத் தாக்குதலின் தொடக்கமாக இருக்கின்றது என்று கர்தினால் திமோத்தி டோலன் கூறியுள்ளார்.
தங்களது சமயக் கோட்பாட்டை மீறாமல் இருந்தால், கத்தோலிக்கர்கள் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை இழக்க வேண்டியிருக்கும் என்று அரசு சொன்னால், இது எங்கே போய் முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் கர்தினால் டோலன்.
ஒபாமாவின் இந்நடவடிக்கை குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கேட்டுள்ள கர்தினால் டோலன், கருத்தடை குறித்த அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றிய ஆணை, அரசியல் அமைப்பின் வரையறைகளை மீறுவதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒபாமாவின் இந்நடவடிக்கை, அவசரகால நிலையை உருவாக்கியுள்ளதாகவும், சமய நம்பிக்கையாளர்கள், தங்களது மனசாட்சியை மீறுவதற்கு இது கட்டாயப்படுத்தும் எனவும் குறிப்பிட்டு, பல மதங்களைச் சார்ந்த அமைச்சர்கள் வெள்ளை மாளிகைக்குச் செய்தி அனுப்பியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.