அமைதியை வளர்க்கும் எண்ணத்துடன் அரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் பங்கேற்க ஆயரின் அழைப்பு
பிப்.23,2012. அமைதியையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் எண்ணத்துடன் கிழக்கு Timor
மக்கள் வரவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்
ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் 17ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தல் நல்ல முறையில்
நடைபெற கிழக்கு Timor தலத் திருஅவை 111 நாட்கள் செப முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த
முயற்சியின் ஒரு பகுதியாக, அண்மையில் குருக்கள், துறவியர், மக்கள் ஆகிய 5000க்கும் அதிகமானோர்
கலந்து கொண்ட ஓர் அமைதி ஊர்வலத்தை முன்னின்று நடத்திய Dili மறைமாவட்டத்தின் ஆயர் Alberto
Ricardo da Silva, நாட்டில் அமைதியைக் கொணரும் முயற்சிகளில் திருஅவை எப்போதுமே ஈடுபட்டு
வருகிறது என்று கூறினார். பதினோரு ஆண் வேட்பாளர்களும் இரு பெண் வேட்பாளர்களும் போட்டியிடும்
இந்த அரசுத் தலைவர் தேர்தலின் பிரச்சாரங்கள் பிப்ரவரி 29ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 14ம்
தேதி முடிவடையும் என்று UCAN செய்தி குறிப்பொன்று கூறுகிறது.