காடுகளில் ஏற்படும் தீ விபத்தால் ஆண்டுக்கு 3.39 இலட்சம் பேர் உயிரிழப்பு
பிப்.21,2012. காடுகள் மற்றும் விளைநிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கி உலகம்
முழுவதும் ஆண்டுக்கு 3.39 இலட்சம் பேர் பலியாவதாக அண்மை ஆய்வொன்று கூறுகிறது. கனடாவின்
வான்கூவரில் இடம்பெற்ற அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில்
வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், காடுகள் மற்றும் விளைநிலங்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும்
விபத்துகள் மற்றும் தீயை அணைக்கும் முயற்சியில் தோல்வியடைந்து இறப்பவர்களின் எண்ணிக்கை
ஆண்டுக்கு 3.39 இலட்சமாக உள்ளது எனக் கூறப்பட்டது. இதில், அதிகபட்சமாக ஆப்ரிக்காவின்
சஹாராவில் 1.57 இலட்சம் பேரும், தெற்கு ஆசியாவில் 1.10 இலட்சம் பேரும் பலியாகின்றனர்
எனவும் தெரிவிக்கப்பட்டது.