2012-02-21 15:18:57

கவிதைக் கனவுகள் தவம்... பலவிதம்


தவம்.
மதங்கள் உணர்த்தும் வழி
மனங்களை உயர்த்தும் வழி

கருவிலிருந்து கல்லறை வரை
மனித வாழ்வின் பல நிலைகளில்
உணர்ந்தும் உணராமலும்
உடன்வருவது... தவம்.

குழந்தை கருவில் உருவானதும்
துவங்கும் தாயின், தந்தையின் தவம்,
வளர்ந்து மகளும், மகனும் - உலகை
வலம்வரும் வரைத் தொடரும்.
வலம்வரும் பாதையில் விரியும்
வலைகளில் சிக்கும் மகவுக்காய்
தொடரும் தாயின், தந்தையின் தவம்.

கனவு மனதில் உருவானதும்
உணவும் உறக்கமும் துறந்து
கனவு நனவாகும் வரை
மனத்தைக் கட்டும் தவங்கள்.

புகழ்தேடி தவம் - உலகைப்
புறந்தள்ளி தவம்
அறம் நாடி தவம் - தூய
அகம் வேண்டி தவம்.








All the contents on this site are copyrighted ©.