கோவாவில் வழக்கமாக நடைபெறும் 'கார்னிவல்' கேளிக்கை விழாக்கள் இரத்து
பிப்.20,2012. தவக்காலம் துவங்குவதற்கு முன், கோவாவில் வழக்கமாக நடைபெறும் 'கார்னிவல்'
கேளிக்கை விழாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கோவாவில் இச்சனிக்கிழமை நடைபெற்ற ஒரு
பேருந்து விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் இறந்தனர். விபத்தில் இறந்தவர்களின்
குடும்பங்களுக்கு கோவா பேராயர் Felipe Neri Ferrao தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். இந்த
விபத்தை அடுத்து, இஞ்ஞாயிறு முதல் மூன்று நாட்கள் நடைபெறவிருந்த ‘கார்னிவல்’ கொண்டாட்டங்களைக்
கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் இரத்து செய்துள்ளார். விபத்தில் இறந்த நான்கு குழந்தைகளில்
மூன்று குழந்தைகள் கத்தோலிக்கர்கள். புனித தாமஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த
இம்மூன்று குழந்தைகளின் அடக்கச் சடங்கு இத்திங்களன்று நிறைவேறியது.