2012-02-20 15:21:23

ஆஸ்திரேலியகுருவுக்கு பாகிஸ்தான் அரசின் மிகஉயரியவிருது


பிப் 20, 2012. வெளிநாட்டவர்க்கான மிக உயரிய விருதான Sitara-e-Quaid-e-Azam விருதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கத்தோலிக்க குரு Robert McCulloch என்பவருக்கு வழங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.
கொலம்பன் மறைபோதகச் சபையைச் சேர்ந்த இக்குரு, நல ஆதரவு, கல்வி மற்றும் மதங்களிடையேயான உறவு ஆகிய துறைகளில் ஆற்றிய பணிகளுக்கென இவ்விருது வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
2010ம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் பாகிஸ்தானில் மருத்துவ, கல்வி மற்றும் பிறரன்புப் பணிகளையும் திறம்பட ஆற்றியுள்ள குரு McCulloch, தற்போது உரோம் நகரில் உள்ள கொலம்பன் தலைமையகத்தில் பொருளாளராகச் செயலாற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.