2012-02-16 13:58:17

மேகாலயாப் பகுதி மக்களின் 'அன்னைத் தெரேசா'வாக விளங்கிய அருள் சகோதரி Amalia இறையடிச் சேர்ந்தார்


பிப்.16,2012. இந்தியாவில் மேகாலயாப் பகுதி மக்களின் 'அன்னைத் தெரேசா' என்று அழைக்கப்பட்ட அருள் சகோதரி Amalia Pereda Ortiz de Zarate இத்திங்களன்று தனது 84வது வயதில் இறையடிச் சேர்ந்தார். இச்செவ்வாயன்று அவர் Shillongல் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
Shillongல் தலை சிறந்த மருத்துவப் பணிகள் ஆற்றிவரும் நாசரேத் மருத்துவமனையை நிறுவி 25 ஆண்டுகளாகப் பணி புரிந்துவந்த அருள்சகோதரி Amalia, இஸ்பானிய நாட்டை சார்ந்தவர். கிறிஸ்து இயேசு மறைபரப்புப் பணியாளர்கள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி, 1946ம் ஆண்டு துறவு வாழ்வை மேற்கொண்டு, 15 ஆண்டுகள் பயிற்சிகளுக்குப் பின் இந்தியா வந்தடைந்தார்.
1965ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாய் இவர் இந்தியா வந்தடையும் பங்களாதேஷ் அகதிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.
வறியோருக்கு மருந்துகள் கொடுப்பது மட்டுமல்லாது, அவர்கள் நலமாக, சுத்தமாக வாழும் வழிகளையும் அருள்சகோதரி சொல்லித் தந்தார் என்று அவரது துறவுச் சபையைச் சேர்ந்தவர்கள் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.