நேர்காணல் – இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30 வது பொதுக் கூட்டம்
பி்ப்.16,2012. “சிறநததோர் இந்தியாவைப் படைக்க” என்ற தலைப்பில், இந்திய கத்தோலிக்க ஆயர்
பேரவையின் 30 வது பொதுக் கூட்டம், இம்மாதம் 1-8 வரை பெங்களூருவில் நடைபெற்றது. இதில்
இந்தியாவின் 164 மறைமாவட்டங்களிலிருந்து 160க்கு மேற்பட்ட ஆயர்களும், இந்தியத் திருப்பீடத்
தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர்
கர்தினால் பீட்டர் டர்க்சன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம்
குறித்துத் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார் சென்னை-மயிலைப் பேராயர் மேதகு மலையப்பன்
சின்னப்பா அவர்கள்.