வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் பெருங்கடல்களின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு
பிப்.10,2012. “வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் பெருங்கடல்களின் தாக்கம்” குறித்து
பொதுமக்களுக்கு விழிப்புணர்வைப் புகட்டும் நோக்கத்தில், உலகின் பெருங்கடல்களில் பயணம்
செய்து வரும் அறிவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று தற்போது நியுயார்க் வந்தடைந்துள்ளது ஏறத்தாழ
மூன்று ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி வரும், Tara Oceans என்ற இக்கப்பல் பணியாளர்கள், அட்லாண்டிக்,
பசிபிக், அண்டார்டிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் எழுபதாயிரம் மைல்கள் பயணம்
செய்து, வெப்பநிலை மாற்றத்தினால் கடல்சார் வாழ்வு, பல உயிரினங்களின் வாழ்வு போன்றவைகளுக்கு
ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். UNEP என்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல்
திட்ட அமைப்பு மற்றும் யுனெஸ்கோவின், சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மற்றும் பெருங்கடல்
அமைப்பின் ஆதரவுடன் இப்பணி நடத்தப்பட்டு வருகிறது.