2012-02-09 16:02:54

இந்தோனேசியாவின் ஒரு சில தீவுகளில் உருவாகியுள்ள பஞ்சத்தை நீக்க கத்தோலிக்கத் திருஅவை முயற்சிகள்


பிப்.09,2012. இந்தோனேசியாவின் ஒரு சில தீவுகளில் உருவாகியுள்ள பஞ்சத்தை நீக்க இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இந்தோனேசியாவில் கிழக்கு சும்பா தீவு மற்றும் கிழக்கு Nusa Tenggara பகுதிகளில் வேளாண்மை பொய்த்துவிட்டதால் அங்குள்ள மக்கள் பட்டினியால் இறக்கும் சூழல் உருவாகியுள்ளது.
"ஒரு கிண்ணத்தில் அரிசி" என்ற பெயரில் தலத் திருஅவை மேற்கொண்டுள்ள இந்தத் துயர்துடைக்கும் பணியால் இதுவரை 2000 அமெரிக்க டாலர்கள் நிதியும், பல மூட்டைகள் அரிசியும் திரட்டப்பட்டுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்தோனேசிய மக்கள் ஒன்றிணைந்து வர வேண்டிய நேரம் இது என்று ஆயர்கள் Hilarius Moa Nurak, மற்றும் Yos Suwatan ஆகியோர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.