2012-02-07 16:03:41

ஹொண்டுராசில் வன்முறை அதிகரிப்பு, அரசுத்தலைவருக்குக் கர்தினால் எச்சரிக்கை


பிப்.07,2012. ஹொண்டுராசில் வன்முறை பரவலாக இடம் பெற்று வருவதை ஏற்றுக் கொண்டு, அந்நாட்டில் வளர்ந்து வரும் வறுமையை அகற்றுவதற்கு அரசுத்தலைவர் Porfirio Lobo ஆவன செய்யுமாறு வலியுறுத்தினார் அந்நாட்டுக் கர்தினால் Oscar Andres Rodriguez.
அதிகரித்து வரும் கடும் வன்முறைகள், வறுமை, வாழ்வை மதிப்பது குறைபடுதல், குடும்பங்கள் பிளவுபடுதல், காவல்துறையில் ஊழல், போதைப்பொருள் வியாபாரம், சமயம் சார்ந்த குழப்பம், கட்டுப்பாடற்ற குடியேற்றம் ஆகியவற்றால், நமது தாயகம் மிகவும் வேதனையுடன் இரத்தம் சிந்தி வருகின்றது என்றும் கர்தினால் கூறினார்.
பயம், அழுகை, உறக்கமின்மை, பெருங்கவலை அகிய இவற்றோடு வாழ்ந்து கொண்டிருக்க முடியாது, மாறாக, தீமையை நன்மையால் வெல்லுமாறும் அவர் அரசுத்தலைவரைக் கேட்டுக் கொண்டார்.
ஹொண்டுராஸ் நாட்டின் பாதுகாவலியாகிய Suyapa அன்னைமரியா திருவுருவம் கண்டெடுக்கப்பட்டதன் 265ம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய நிகழ்வில் இவ்வாறு கூறினார் கர்தினால் Andres Rodriguez. இவ்விழாவில் அரசுத்தலைவர் Lobo உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2010ம் ஆண்டில் லோபோ அரசுத்தலைவர் பதவிக்கு வந்த பின்னர் 17க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராசில் 2011ம் ஆண்டில் 6,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.