2012-02-07 16:06:41

மார்ச் 1ல் செயல்பாட்டுக்கு வருகிறது தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்


பிப்.07,2012. இந்தியாவில், தேசியப் பயங்கரவாத தடுப்பு மையத்தை, மார்ச் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967ன் கீழ், எந்த நபரையும் கைது செய்யவும், எந்த ஓர் இடத்திலும் சோதனை நடத்தவும், தேசியப் பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு, மூன்று வாரங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மார்ச் 1ம் தேதி முதல், தேசியப் பயங்கரவாத தடுப்பு மையம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த அமைப்பில், உளவுத் தகவல்கள் சேகரிப்பு, உளவுத் தகவல்களை ஆய்வு செய்தல், நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என, மூன்று பிரிவுகள் இருக்கும்.
தேசியப் புலனாய்வு நிறுவனத்திற்குப்பின், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்படும் இரண்டாவது அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.