திருத்தந்தை வருகிற செப்டம்பரில் லெபனனுக்குத் திருப்பயணம்
பிப்.07,2012. 2010ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளுக்கென வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு
ஆயர் மாமன்றத்தின் அப்போஸ்தலிக்க ஏட்டை வருகிற செப்டம்பரில் திருத்தந்தை வழங்குவார் என்று
எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal அறிவித்தார். வருகிற செப்டம்பரில்
திருத்தந்தை லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, அந்த ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள்
அடங்கிய ஏட்டை வழங்குவார் என்று எருசலேம் சிமியோன், அன்னா ஆலயத்தில், ஆண்டவர் காணிக்கையாக
அர்ப்பணிக்கப்பட்ட விழாத் திருப்பலியை நிகழ்த்தியபோது கூறினார் முதுபெரும் தலைவர் Fouad
Twal. இந்த அறிவிப்புப் பற்றிக் கருத்து தெரிவித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை
அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இந்நோக்கத்திற்காகத் திருத்தந்தை லெபனன் நாட்டுக்குத்
திருப்பயணம் மேற்கொள்வது பற்றிச் சிந்தித்து வருவதாகக் கூறினார்.