2012-02-07 16:01:23

கர்தினால் Levada : குருக்களின் பாலியல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளைக் கண்டுபிடிக்க அழைப்பு


பிப்.07,2012. உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இத்திங்களன்று இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் William Joseph Levada, குருக்களின் பாலியல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல்ல வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
குருக்களின் இத்தகைய தவறான நடவடிக்கைகளிலிருந்து சிறாரைப் பாதுகாக்க வேண்டுமெனவும், குருக்கள் இந்தச் செயல் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கும், குருத்துவ வாழ்விலிருந்து இதனை அப்புறப்படுத்தவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் கர்தினால் Levada வலியுறுத்தினார்.
இன்னும், குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளுக்குப் பலியான சிறாருக்காகத் திருஅவை மிகவும் வருந்துகிறது என்பதைக் காட்டுவதற்காக மன்னிப்பு வழிபாடு ஒன்றும், திருப்பீட ஆயர் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet தலைமையில் இச்செவ்வாயன்று நடைபெற்றது.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிக் குருக்களைக் கத்தோலிக்க அதிகாரிகள் பாதுகாத்த செயல்களுக்காகவும் இவ்வழிபாட்டில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.