பிப்.07,2012. வேலைவாய்ப்பின்மை, போதுமான கல்வி வசதியின்மை, அரசு முதலீடுகள் பற்றாக்குறை,
பாதுகாப்பற்ற வேலையிடங்கள் போன்றவை, இளையோரை அதிகம் பாதித்து வருவதாக ஐ.நா.அறிக்கை ஒன்று
கூறுகிறது. 15க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளையோரிடம் ஒரு மாத காலமாக இணையதளம்
வழியாக ஆய்வு நடத்திய, DESA என்ற ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை, இவ்வறிக்கையை
இத்திங்களன்று வெளியிட்டது. 2009ம் ஆண்டில் உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர்,
ஏறக்குறைய 7 கோடியே 58 இலட்சம் இளையோர் வேலையின்றி இருந்தனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.