அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொலை
பிப்.06,2012. பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் வழியே நடத்தப்பட்ட தாக்குதல்களில்
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலண்டனிலிருந்து இயங்கும் புலனாய்வு செய்திப்
பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இத்தாக்குதல்களுக்குப் பின்னர் மீட்பு நடவடிக்கைகளில்
ஈடுப்பட்டிருந்தவர்கள் மீதும் இரண்டாவது கட்டமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை,
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வான் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகக்
கூறப்படுவதை அதிபர் ஒபாமா அண்மையில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.