மலேரியாவால் இடம் பெறும் இறப்புக்களின் எண்ணிக்கை 2020க்குப் பின்னர் குறையும் – புதிய
அறிக்கை
பிப்.03,2012. உலக அளவில் மலேரியாவால் இடம் பெறும் இறப்புக்களின் எண்ணிக்கை, 2020ம் ஆண்டுக்குப்
பின்னர்தான் குறையும் என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. The Lancet என்ற பிரிட்டன்
மருத்துவ இதழில் வெளியான அறிக்கையின்படி, மலேரியாவால் இடம் பெற்ற இறப்புக்கள், 1980ம்
ஆண்டில் 9 இலட்சத்து 95 ஆயிரமாகவும், 2004ம் ஆண்டில் 18 இலட்சத்து 20 ஆயிரமாகவும், 2010ம்
ஆண்டில் 12 இலட்சத்து 40 ஆயிரமாகவும் இருந்தது என்று தெரிய வந்துள்ளது. எனினும்,
2020ம் ஆண்டுக்குப் பின்னர்தான் இவ்வெண்ணிக்கை ஒரு இலட்சமாகக் குறையும் என்றும் அவ்வறிக்கை
கூறுகிறது.