2012-02-03 15:52:19

MISEREOR இயக்குனர்: இந்தியத் திருஅவை சமுதாய நல்வாழ்வுப் பணிகளை ஊக்குவிக்க வேண்டும்


பிப்.03,2012. இந்தியத் திருஅவை, மேற்கொள்ளும் மறைப்பணியில், சமுதாய நல்வாழ்வுப் பணிகளுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு ஜெர்மன் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இம்மாதம் ஒன்றாந்தேதி முதல் பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் வளர்ச்சித்திட்ட ஒத்துழைப்பு நிறுவனமான MISEREOR இயக்குனர் பேருட்திரு Josef Sayer இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியில் ஆழமாக வேரூன்றப்பட்டுள்ள இந்தியத் திருஅவை, இந்தியச் சமுதாயத்துக்கு எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகின்றது என்றும் பாராட்டினார் பேருட்திரு Sayer.
MISEREOR ஜெர்மன் பிறரன்பு நிறுவனம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 1,600 சமூகநலத் திட்டங்களுக்கு உதவியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.