2012-02-02 15:29:20

குஜராத்தில் பழமை வாய்ந்த கல்லறைத் தோட்டம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதற்கு வன்மையான கண்டனம்


பிப்.02,2012. குஜராத்தின் அகமதாபாத் நகருக்கருகே சபர்மதியில் இருந்த பழமை வாய்ந்த கல்லறைகள் இயந்திரங்கள் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை அகில இந்திய கிறிஸ்தவ கழகம் வன்மையாக எதிர்த்துள்ளது.
குடியரசு நாளன்று நடைபெற்ற இந்த வன்முறைச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்புதனன்று ஊர்வலம் மேற்கொண்ட கிறிஸ்தவக் கழகம், சபர்மதி காவல் துறை நிலையத்தில் முறையீடு செய்துள்ளது.
இயந்திரங்கள் கொண்டு நடத்தப்பட்ட இந்த வன்முறைச் செயலுக்குப் பின்புலத்தில் ஒரு குழுவே இயங்கியிருக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி வாகனங்கள் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கிறிஸ்தவ உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்றும் இக்குழுவைச் சார்ந்தவர்கள் கூறினர்.
அகமதாபாத் பகுதியில் ஆங்கிலேயர்கள் இருந்தபோது, அங்கிருந்த ஏழு கிறிஸ்தவ சபைகளுக்குப் பொதுவாக இந்த கல்லறைத் தோட்டம் வழங்கப்பட்டது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.