பிப்.02,2012. பிப்ரவரி 4, ஓரியூர் புனித அருளானந்தர் விழா. போர்த்துக்கீசிய இயேசு சபை
அருள்தந்தையாகிய இப்புனிதர், இராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரில் மறைசாட்சியாகத் தலை வெட்டப்பட்டு
உயிர் துறந்தார். ஜான் டி பிரிட்டோ என்ற புனித அருளானந்தரின் பரிந்துரையால் பல புதுமைகள்
நடைபெற்று வருகின்றன. விசுவாசத்தோடு இப்புனிதரிடம் செபிக்கும் மக்கள் மனஅமைதியைப் பெறுகின்றனர்.
குடும்பங்களில் நல்ல காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு தாங்கள் பெற்ற வரங்களைப் பகிர்ந்து
சில பக்தர்கள் கொள்கிறார்கள்.