2012-02-01 15:01:50

பாகிஸ்தான் முன்னேறுவதற்கு கல்வி மிகவும் முக்கியம் - ஆயர் Anthony Rufin


பிப்.01,2012. சமுதாயத்தில் நடப்பவற்றை அறிவுப்பூர்வமாகவும், தெளிவாகவும் கண்டுணர கல்வி மிகவும் அவசியம் என்பதால், பாகிஸ்தான் முன்னேறுவதற்கு கல்வி மிகவும் முக்கியம் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் ராவல்பிண்டி மறைமாவட்டத்தின் ஆயர் Anthony Rufin இவ்வாரம் முழுவதும் தன் மறைமாவட்டத்தில் உள்ள பள்ளிகளைப் பார்வையிட்டு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசி வருவதாக ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலும் கலாச்சாரத்தைச் சரிவர புரிந்துகொள்வதற்கு கல்வி ஒரு முக்கிய கருவி என்பதால், நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களையும் பயின்று, மற்றவர்களைப் புரிந்து கொள்வதற்கு கல்விக் கூடங்கள் மிகவும் அவசியம் என்று ஆயர் Rufin மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கூறி வருவதாக இப்பேட்டியில் குறிப்பிட்டார்.
சமுதாயத்தின் விளிம்பில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு கல்வியின் அவசியம் மிக அதிகம் உள்ளது என்பதையும் ஆயர் Rufin வலியுறுத்தினார்.
18 கோடி மக்களைக் கொண்ட பாகிஸ்தானில், 2 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் கல்வி அறிவு பெறும் உரிமையை இழந்துள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.