2012-02-01 14:57:59

திருத்தந்தை மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தின் விவரங்கள்


பிப்.01,2012. வருகிற மார்ச் மாதம் 23 முதல் 29 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தின் விவரங்களை இச்செவ்வாயன்று வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
மார்ச் 23 வெள்ளியன்று காலை உரோம் நகர் லியோனார்தோ த வின்சி பன்னாட்டு விமானத்தளத்திலிருந்து கிளம்பும் திருத்தந்தை, முதலில் மெக்சிகோ நாட்டிற்குச் செல்கிறார்.
மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்கள் மெக்சிகோவில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, மார்ச் 26 மாலையில் க்யூபா சென்றடைகிறார். மார்ச் 27 மற்றும் 28 ஆகிய இருநாட்கள் அந்நாட்டில் திருப்பயணம் நிகழ்த்தியபின், 29ம் தேதி காலை மீண்டும் உரோம் நகர் வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளின் திருப்பயணங்களில் திருத்தந்தை பத்து இடங்களில் உரையாற்றுவார் என்று தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.