2012-01-31 15:34:31

பெங்களூருவில் இயேசு சபை கல்லூரி மீது தாக்குதல்


சன.31,2012. குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றவில்லை என்ற பொய்க் குற்றச்சாட்டுடன் கர்நாடக மாநிலத்தில் இயேசு சபை கல்லூரி ஒன்றை தாக்கியுள்ளது இந்து தீவிரவாத குழு ஒன்று.
சமூகக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் இக்கல்லூரியின் தலைமை நிறுவனமான Jnana Jyoti கட்டிடத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்த போதிலும், கொடியேற்றவில்லை என்ற குற்றாச்சாட்டுடன் இக்கும்பல் பங்களூருவுக்கு 40 கிலோ மீட்டர் தெற்கேயுள்ள St.Joseph Anegal கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், கல்லூரி அதிபரையும் தாக்க முயன்றுள்ளது.
இத்தீவிரவாதிகளின் தாக்குதலின்போது அதைப் பார்த்து மௌனம் காத்த காவல்துறை, அவர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் அதிபர் குரு Melvin Mendoncaவை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று 9மணி நேரம் அங்ககேயே உட்கார வைத்து விசாரணை செய்துள்ளது.
இந்தத் தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் தேசியக் கொடிக்கு மரியாதை அளிப்பதல்ல, மாறாக, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு தாங்கள் ஆற்றிவரும் சேவையைத் தடைச் செய்வதே என்றார் குரு மெல்வின்.








All the contents on this site are copyrighted ©.