2012-01-31 15:35:05

இந்திய ஆயர் பேரவைக்கூட்டம் பங்களூருவில் இப்புதனன்று துவங்குகிறது


சன.31,2012. 'சிறப்பானதொரு இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் திருஅவையின் பங்கு' என்ற தலைப்பில் இப்புதன் முதல் அடுத்த புதன் வரை இந்திய கத்தோலிக்க ஆயர்களின் எட்டு நாள் கூட்டம் பெங்களூருவில் இடம்பெறுகிறது.
இந்திய ஆயர் பேரவைத் தலைமையகம் டெல்லியிலிருந்து செயலாற்றி வருவதன் ஐம்பதாவது ஆண்டும், கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பின் ஐம்பதாவது ஆண்டும் நடப்பாண்டில் சிறப்பிக்கப்படுவதையொட்டி இக்கூட்டத்திற்கான தலைப்பு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இந்திய ஆயர் பேரவையின் துணைப் பொதுச்செயலர் குரு தாமஸ் செக்குய்ரா.
1962ம் ஆண்டில் இந்திய ஆயர் பேரவையின் தலைமையகம் பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
இந்தியாவிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ துவக்கி வைக்கும் இக்கூட்டத்தில், இந்தியாவின் 160 ஆயர்களுடன் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சனும் கலந்து கொள்கிறார்.








All the contents on this site are copyrighted ©.