வழிபாட்டு உரிமை கேட்டு இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவர் மாளிகை முன் போராட்டம்
சன.30,2012. தாங்களும் குடிமக்கள் என்ற முறையில் தங்கள் வழிபாட்டு உரிமையை இந்தோனேசிய
அரசு மதிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகை
முன் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கிறிஸ்தவ சபையினரும் இணைந்து அமைதிப் போராட்டம்
ஒன்றை மேற்கொண்டனர். 2010ம் ஆண்டு கிறிஸ்தவ சபை கோவில் ஒன்றை அரசு அதிகாரிகள் மூடியதைத்
தொடர்ந்து, திறந்த வெளியில் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய இக்கிறிஸ்தவ சபையினரை தீவிரவாத
முஸ்லீம் குழு ஒன்று தாக்கி வருவதால், வழிபாட்டு உரிமை கேட்டு அரசுத்தலைவர் மாளிகை முன்
இஞ்ஞாயிறன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, கிறிஸ்தவ குழுக்கள் மீதான
தாக்குதலுக்கு தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு இஸ்லாமிய குழு ஒன்று, மதசகிப்புத்தன்மையுடன்
செயல்படுமாறு தீவிரவாதக் குழுக்களிடம் விண்ணப்பித்துள்ளது.