2012-01-30 14:38:23

காங்கோ குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட ஐ.நா. நிதி உதவி


சன.30,2012. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட அவசர கால நிதியுதவியாக 91 இலட்சம் டாலர்களை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால நிதி உதவி அமைப்பு.
காங்கோ குடியரசில் 22,000க்கும் மேற்பட்ட மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 இலட்சம் டாலர்களை ஐநாவின் UNICEF அமைப்பிற்கும் 47 இலட்சம் டாலர்களை உலக நல அமைப்பான WHOவிற்கும் வழங்குகிறது CERF என்ற இந்த ஐ.நா.அமைப்பு.
இவ்விரு ஐ.நா.அமைப்புகளும் காங்கோ குடியரசின் அரசு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் காலரா நோய்க்குப் பலியாகியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.