கண்ணாடிகள்! நகைக்கடைகளிலும் துணிக்கடைகளிலும் அழகு சாதனக் கடைகளிலும் எங்கிருந்து
தான் கிடைக்கின்றனவோ அத்தனையையும் அழகாய்க் காட்டுகின்றன.
நினைவுகளுக்காய்
ஒரு முகம் கடமைகளுக்காய் ஒரு முகம் அன்புக்காய் அழகுமுகம் பண்புக்காய்ப் பலமுகம் நிதம்
ஒரு முகமாக தொலைந்து போன முகத்தைத் தேடினேன் உன்னிடம். ஆனால், கண்ணாடியே, கண்டேன்
என் முகத்தை மட்டும். ஊருக்கெல்லாம் முகம் காட்டும் உனக்கு முகமில்லையே!