2012-01-28 15:54:19

போக்கோ ஹராம் முஸ்லீம் தீவிரவாதிகள் பிரச்சனைக்கு அரசியல்ரீதியான தீர்வு அவசியம் - அபுஜா பேராயர்


சன.28,2012. ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இடம் பெறும் Boko Haram முஸ்லீம் தீவிரவாதிகள் பிரச்சனையை, பாதுகாப்புத் துறையினால் மட்டும் தீர்க்க முடியாது, ஆனால் இதற்கு அரசியல்ரீதியான தீர்வு அவசியம் என்று அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan கூறினார்.
நைஜீரியாவின் வட பகுதியிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளும் இவ்விவகாரத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றுரைத்த பேராயர் Onaiyekan, வன்முறைகளைத் தூண்டிவிடும் செயல்களைக் களைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
நைஜீரியா போன்ற பெரிய நாட்டில் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் உறுதி அளிப்பது இயலாத காரியம், ஏனெனில் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஆயுதங்களைக் கடத்துவது மிக எளிது என்ற அபுஜா பேராயர், இருந்த போதிலும், Boko Haram தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தார்.
அண்மையில், கானோ நகரில் இடம் பெற்ற தாக்குதலில் சுமார் 185 பேர் இறந்தனர். இது தொடர்பாக, சுமார் 200 Boko Haram அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.