சன.28,2012. உலகத்தாராளமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை உலகத்
தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமைத் தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர்
ஆலிவர் டி ஷூட்டர் கோரிக்கை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டு டாவோஸ் நகரில்
நடைபெற்று வரும் 42வது உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களிடம் இவ்விண்ணப்பத்தை
அவர் முன்வைத்தார். உலகமயமாக்குதலால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்கள் குறித்து கண்மூடித்தனமாக
இருக்காமல், மனித உரிமைகளையும் அவற்றின் நீடித்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டும்
என்றும், ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் அதிகாரி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்படுகின்ற
முயற்சிகளில் உலகமயமாதலில் மனித உரிமைகள் சார்ந்த விழுமியங்களை உறுதிப்படுத்துவது புதிய
கோணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடற்ற உலகமயமாதலின் அடையாளங்களாக
உலகில் பரவலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருப்பது குறித்து இப்போதாவது கவனம் செலுத்த
வேண்டியிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.