சன.26,2012. போதகர் எ.கிப்சன் அவர்கள், தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல
ஆங்கிலஆலயப் போதகர். இம்மாதம் 18 முதல் 25 வரை கத்தோலிக்கத் திருஅவை உட்பட, உலகின் 300க்கும்
மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ சமூகங்களும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைச் சிறப்பித்தன.
இப்புதனன்று முடிவுற்ற இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்பட்ட விதம் குறித்து
அறிவதற்காக, போதகர் எ.கிப்சன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.