2012-01-26 15:52:52

தேர்தல் நம்பகத்தன்மை குறித்து Congo ஆயர்கள் கேள்வி


சன.26,2012. Congo நாட்டின் தேர்தல் குளறுபடிகள் குறித்த பெரும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பானவர்கள், தவறுகளைத் துணிவுடன் ஏற்று தீர்வுகளைத்தர முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
Congo நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களின் சட்டப்பூர்வமான நிலைப்பாடு குறித்துக் கேள்வியெழுப்பியுள்ள ஆயர்கள், தேர்தல் அதிகாரிகள் தங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, தேவையெனில் பதவி விலகும் துணிவை வெளிப்படுத்த வேண்டும் என்றனர்.
மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்றதாகவும், தேர்தல் பெட்டிகள் ஒரு சிலராலேயே கள்ள ஓட்டுகளால் நிரப்பப்பட்டதாகவும் ஆயர்கள் தங்கள் அண்மை அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.