2012-01-26 15:58:40

இந்தியச் சிறைக் கைதிகள் மரணம் குறித்து மனித உரிமை அமைப்பு கவலை


சன.26,2012. 2011ம் ஆண்டில், சிறையில் கைதிகளின் மரணங்களையும், சிறைக்கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதையும் இந்திய அரசு தடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது Human Rights Watch என்ற மனித உரிமைகள் கழகம்.
மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகைத்துறையும், சமூகக் குழுக்களும் பலம் பொருந்தியவைகளாக இருந்து, நீதித்துறையும் பெரும் மதிப்புக்குரியதாக இருக்கின்றபோதிலும் மனித உரிமை மீறல்களும் தொடர்வதாகக் கூறுகிறது இவ்வமைப்பு.
மனித உரிமைகளில் ஈடுபடுவோர் தண்டனையின்றி தப்புவதற்கு உதவும் சட்டங்கள் திருத்தியமைக்கப்படவேண்டும் என அழைப்பு விடுக்கும் Human Rights Watchன் அறிக்கை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இயைந்த வகையில் கல்வி மற்றும் நல ஆதரவுத் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிவகைச் செய்யப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.