சன.25,2012. பாகிஸ்தானின் கராச்சி உயர் மறைமாவட்டப் புதிய பேராயராக, ஆயர் ஜோசப் கூட்ஸ்
அவர்களை, இப்புதனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கராச்சி உயர் மறைமாவட்டத்தை
இதுவரை நிர்வகித்து வந்த பேராயர் Evarist Pinto அவர்களின் பணி ஓய்வை, திருஅவைச் சட்டம்
401.1ன்படி ஏற்றுக் கொண்ட திருத்தந்தை, இதுவரை Faisalabad ஆயராகப் பணியாற்றிய ஆயர் ஜோசப்
கூட்ஸ் அவர்களை, கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார். 1945ம்
ஆண்டு, Amritsar ல் பிறந்த ஆயர் கூட்ஸ், 1988ம் ஆண்டு மே 5ம் தேதி ஹைதராபாத் வாரிசு ஆயராக
நியமனம் செய்யப்பட்டு, 1990ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாந்தேதி அம்மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்றார்.
1998ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி Faisalabad ஆயராக நியமிக்கப்பட்டார். கராச்சி மறைமாவட்டம்,
1948ம் ஆண்டு மே 20ம் தேதி, பம்பாய் உயர்மறைமாவட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. பின்னர்
அது 1950ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. தற்போது கராச்சி
உயர்மறைமாவட்டத்தில், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.