இசுலாமிய தீவிரவாதக் குழுவின் தாக்குதல் குறித்து நைஜீரிய ஆயர்கள் கவலை
சன 24, 2012. நைஜீரியாவின் வடக்கு நகர் ஒன்றில் இசுலாமியத் தீவிரவாதக் குழு ஒன்று தாக்குதல்
நடத்தியுள்ளது, ஆழமான சமூகப் பிரிவினைகளுக்கும் மக்கள் குடிபெயர்வுக்கும் இட்டுச்செல்லும்
அபாயம் இருப்பதாக, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின் இரு ஆயர்கள். ஒன்றிணைந்த
நைஜீரிய நாட்டிற்கான நம்பிக்கையை இத்தகைய நிகழ்வுகள் சிதைப்பதாக உள்ளன என்றார் அந்நாட்டு
பேராயர் Ignatius Ayau Kaigama. இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் வடபகுதியில்
இசுலாமிய சட்டத்தை புகுத்த முயலும் ஒரு தீவிரவாதக் குழு, Kano என்ற நகரை கடந்த வார இறுதியில்
தாக்கியதில் 150க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையினோர் இசுலாமியர். அரசு
கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சில திருஅவைக் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன
என்றார் Kano நகர் ஆயர் John Namaza Niyiring. இத்தகையத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக
மேலும் வன்முறைகள் தலைதூக்கலாம் என்ற தன் அச்சத்தையும் வெளியிட்டுள்ளார் பேராயர் Kaigama.