2012-01-24 15:18:09

அதிகாரப் பூர்வமற்ற கிறிஸ்தவக் குழுக்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்களிடையே பிளவுகளை உருவாக்கி வருகின்றன


சன.24,2012. பாகிஸ்தான் நாட்டில் வியாபார நோக்குடன் செயல்படும் அதிகாரப் பூர்வமற்ற கிறிஸ்தவக் குழுக்கள், கிறிஸ்தவர்களிடையே பிளவுகளை உருவாக்கி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளன அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள்.
பாகிஸ்தானில் தங்களைத் தாங்களே குருக்களாகவும் ஆயர்களாகவும் அறிவித்துச் செயல்படும் சில கிறிஸ்தவக் குழுக்களின் நடவடிக்கைகளால், கிறிஸ்தவர்கள் குறித்த தப்பெண்ணம் பரவி வருவதாக உரைத்த அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள், இத்தகைய சவால்களை எதிர்கொள்ள கிறிஸ்தவ சபைகளிடையே கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
வன்முறைகளால் எழும் பிரச்னைகளைச் சமாளிக்கவும் கிறிஸ்தவ சபைகளிடையே கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற அழைப்பும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மத அடிப்படையிலான பாகுபாட்டு நிலைகளாலும் தீவிரவாதப் போக்குகளாலும் பல ஆண்டுகளாகப் பிரச்னைகளை அனுபவித்து வரும் கிறிஸ்தவ சபைகள், தற்போது சில அதிக்கரப்பூர்வமற்ற கிறிஸ்தவக் குழுக்களினால் எழும் சவால்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றார் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் கத்தோலிக்க குரு ஒருவர்.








All the contents on this site are copyrighted ©.