2012-01-21 15:28:17

திருஅவை, ஏழைகளின் குரல்களுக்குப் பதில் சொல்கின்றது - காரித்தாஸ் தலைவர்


சன.21,2012. பொதுவாக மக்கள், குறிப்பாக ஏழைகள் பாதிக்கப்படும் சூழல்களில் மட்டுமே கத்தோலிக்கத் திருஅவை ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது என்று அனைத்துலக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்புத் தலைவர் Michel Roy கூறினார்.
இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் 50ம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய Michel Roy, மக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை உருவாக்குவதே காரித்தாசின் பணி என்றும் கூறினார்.
திருஅவை, ஏழைகளின் குரல்களுக்குப் பதில் சொல்கின்றதே தவிர, எந்த விதமான புரட்சிகளையும் உருவாக்குவதில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், சமூகநல நிறுவனங்கள், நாட்டிற்குப் பாதகம் வரும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று இந்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டதற்குப் பதில் அளிக்கும் விதமாகவும், அனைத்துலக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்புத் தலைவரின் உரை இடம் பெற்றதாக ஊடகச் செய்தி ஒன்று கூறியது.







All the contents on this site are copyrighted ©.