2012-01-21 15:32:16

சர்வதேச அளவில் குற்றவாளிகள் 50 விழுக்காடு அதிகரிப்பு


சன.21,2012. சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலில் குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 விழுக்காடு அதிகரித்தது எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் குற்றங்களில் ஈடுபட்டு வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யும் பணியில் இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறை அமைப்பு ஈடுபட்டுள்ளது.
தேடப்படும் குற்றவாளிகள் குறித்த விவரங்களை இன்டர்போலுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்கும்.
இக்குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த 2010ம் ஆண்டில் சுமார் ஐம்பதாயிரமாக இருந்தது. 2011ம் ஆண்டு அது 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2011ம் ஆண்டில் அது 75,000 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் 26 ஆயிரம் பேருக்கு எதிராக எச்சரிக்கையும் அனுப்பப்பட்டது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.