2012-01-21 15:35:43

கவிதைக் கனவுகள் - அழைத்தார்…பணித்தார்


இறைவன் தரும் அழைப்பில் உள்ள சவால்கள் இறைவாக்கினர் எசாயா நூலிலும் லூக்கா நற்செய்தியிலும் கூறப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு கவிதைக் கனவு இது:
இறைவனின் ஆவி நிழலிடவே, இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார், அன்பில் பணித்தார் அவர் பணிதனைத் தொடர்ந்திடவே
வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும், அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவன் அரசில் துயரில்லை என வான் அதிரப் பறை சாற்றிடவும்
என்னை அழைத்தார், அன்பில் பணித்தார் அவர் பணிதனைத் தொடர்ந்திடவே
குருடரும் ஒளியுடன் நடந்திடவும், குவலயம் நீதியில் நிலைத்திடவும்
அருள் நிறை காலம் அவனியிலே இனி வருவதை வாழ்வினில் காட்டிடவும்
என்னை அழைத்தார், அன்பில் பணித்தார் அவர் பணிதனைத் தொடர்ந்திடவே








All the contents on this site are copyrighted ©.