2012-01-20 15:57:01

உலகில் அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள்


சன.20,2012. உலக அளவில் நடக்கும் அனைத்துவகையான கருக்கலைப்புகளிலும் சரிபாதியானவை முறையான மருத்துவக் கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கள் என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களில் பெரும்பாலனவை ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த வளர்ந்து வரும் நாடுகளில் நடப்பதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
உலக அளவில் நடக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களில் ஏறக்குறைய பாதியளவு, ஆப்ரிக்காவில் நடப்பதாகவும் அந்நிறுவன அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் ஏற்படும் கர்பபகாலப் பெண்கள் இறப்பில் 13 விழுக்காடு, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முறைகேடான கருக்கலைப்பின் போது ஆண்டுதோறும் இறக்கும் நாற்பத்து ஏழாயிரம் பெண்களில், இருபத்து ஒன்பதாயிரம் பெண்கள், ஆப்ரிக்கக் கண்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த பத்து ஆண்டுகளாக படிப்படியாக குறைந்துவந்த கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை தற்போது ஒருவித தேக்க நிலையை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
இப்பிரச்சனை இந்தியாவில் இன்னும் மோசமாக இருப்பதாக மகப்பேறு மருத்துவர்களுக்கான சங்கத்தின் முன்னாள் தலைவி ஜயஸ்ரீ கஜராஜ் கூறுயுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.