2012-01-18 15:26:56

பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் இலங்கையில் தேவை - இந்திய வெளியுறவு அமைச்சர்


சன.18,2012. இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நான்கு நாள் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசு அவற்றை நடைமுறைப்படு்த்த வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
இந்த நான்கு நாள் பயணத்தை திங்கட்கிழமை துவங்கிய எஸ்.எம்.கிருஷ்ணா, தெற்கிலும் வடக்கிலும் இந்திய முதலீட்டில் நடந்துவரும் வேலைத்திட்டங்களையும் சென்று பார்வையிடவுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.