சன.17,2012. இந்தியாவில் ஐந்தரை கோடி பேர், உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புனேயைச்
சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். உடல் பருமனைக் குறைப்பதற்காக,
2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள, புனேயைச் சேர்ந்த பிரபல
மருத்துவர் சஷாங் ஷா, நாட்டில் 5 கோடியே 50 இலட்சம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்
எனவும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம், மரபணு பிரச்னை, உடல் உழைப்பின்மை, உள்ளிட்ட
பல காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது எனவும் கூறினார். இந்த உடல் பருமன் நீரிழிவு,
இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாக அமைகிறது' என மேலும் கூறினார் மருத்துவர் ஷா.