இணைய தளத்தில் கத்தோலிக்கர்களின் இருப்பு, தேவையான ஒன்று
சன.17,2012. இணைய தளத்தில் கத்தோலிக்கர்களின் இருப்பு, தேவையான மற்றும் முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்று என்றார் திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் பேராயர் கிளவ்தியோ செல்லி. சுவிட்சர்லாந்தின்
மெர்ஸி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் செல்லி,
2009ம் ஆண்டில் 44கோடி கத்தோலிக்கர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இன்றைய
நவீன சமூகம் தகவல்களின் காலத்திலிருந்து உரையாடலின் காலத்திற்கு கடந்து வந்துள்ளது என்பதையும்
குறிப்பிட்டுப் பேசிய பேராயர் செல்லி, திருத்தந்தையர்கள் 6ம் பால், இரண்டாம் ஜான் பால்
மற்றும் 16ம் பெனடிக்ட், தகவல் தொடர்புத் துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு, கத்தோலிக்க
விசுவாசத்தை எடுத்துரைக்க நம் ஒவ்வொருவருக்கும் உதவுவதாக உள்ளது எனவும் கூறினார்.