2012-01-16 15:08:36

புகைப்பழக்கத்தால் பெருமளவு மரணம் - உள்ளூர் ஆய்வில் அதிர்ச்சி


சன.16,2012. தமிழகத்தின் பெரியகுளம் நகராட்சியில் கடந்த ஆண்டு இறந்த ஆண்களில் 40 விழுக்காட்டினர் புகைபழக்கத்தால் இறந்தது அங்கு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெரியகுளம் நகராட்சி நலவாழ்வுப் பிரிவு நடத்திய ஆய்வின்படி, கடந்தஆண்டு உயிரிழந்த 320 ஆண்களில் 40 விழுக்காட்டினர் புகை பிடிப்பவர்களாகவும், புகையிலை பயன்படுத்துபவராகவும், 25 விழுக்காட்டினர் குடிப்பழக்கம் உள்ளவராகவும் இருந்துள்ளனர். இவர்களில், 30 விழுக்காட்டினர் நீரழிவு நோயாளிகள். 25 முதல் 40 வயதுக்குள் 160 பேர் இறந்துள்ளனர். 2010ம் ஆண்டு 25 விழுக்காட்டினர் மட்டுமே புகைப்பழக்கத்தால் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நலவாழ்வுத்துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம், அரசு மருத்துவ மனை மற்றும் ஆரம்ப நலவாழ்வு நிலையங்களில் புகைபிடிப்பதால் உடல் நலப்பாதிப்பு, மரணம் நிகழ்வதைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.