“உரையாடலில் ஆசியக் கலாச்சாரங்கள்” : ஆசிய வல்லுனர்கள் கூட்டம்
சன.14,2012. ஆசியச் சமுதாயம், தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு
காண்பது பற்றியும், அச்சமுதாயத்தின் தற்போதைய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் ஆசியப்
பல்சமயக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வெள்ளியன்று பாங்காக்கில் முடிவடைந்த
மூன்று நாள் கூட்டத்தில் கிறிஸ்தவம், புத்தம், இந்து, இசுலாம், கன்பூசியம், ஜைனம், தாவோயிசம்,
இன்னும் பிற மரபு மதங்களின் பிரதிநிதிகள் என சுமார் 50 வல்லுனர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின்
குவாஹாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், பன்மைக்
கலாச்சாரத்தையும் பல்சமய உரையாடலையும் ஊக்குவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது