2012-01-13 15:45:27

தர்மபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் இலாரன்ஸ் பயஸ் நியமனம்


சன.13,2012. இந்தியாவின் தர்மபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் இலாரன்ஸ் பயஸ் துரைராஜ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தர்மபுரி மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்கள், ஓய்வு வயது காரணமாக பதவி விலகுவதை, திருஅவைச் சட்டம் எண் 401:1ன்படி ஏற்றுக் கொண்ட திருத்தந்தை, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, இதுவரைப் பணியாற்றிய ஆயர் இலாரன்ஸ் பயஸ் துரைராஜ் அவர்களை நியமித்துள்ளார்.
1954ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சென்னையில் பிறந்த ஆயர் இலாரன்ஸ் பயஸ், 1981ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி குருவாகவும், 1999ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயர் இலாரன்ஸ் பயஸ், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத் துணை ஆயராக, 1998ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.