இந்தியா, போலியோ நோய்ப் பாதிப்பற்ற பகுதியாக மாறி வருகின்றது - WHO
சன.13,2012. இந்தியாவில், கடந்த ஆண்டில் போலியோவினால் யாரும் புதிதாகப் பாதிக்கப்பட்டதாகப்
பதிவு செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அந்நாடு, போலியோ நோய்ப் பாதிப்பற்ற பகுதியாக
மாறி வருகின்றது என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் இவ்வியாழனன்று கூறியது. இந்தியாவின்
இவ்வெற்றி, அந்நாடு பொதுநலவாழ்வில், பெரும் சாதனையை எட்டியுள்ளது என்று கூறும் அந்நிறுவனம்,
இது, உலக அளவில் போலியோ நோய்ப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது
என்றும் கூறியது. இந்தியாவில், தேசிய அளவில் இடம் பெற்ற இரண்டு தடுப்பூசித் திட்டங்களின்கீழ்,
ஒவ்வோர் ஆண்டும், ஐந்து வயதுக்கு உட்பட்ட 17 கோடிச் சிறாருக்குப் போலியோ தடுப்பூசி போடப்பட்டது
என்று பாராட்டியுள்ளது அந்நிறுவனம். மேலும், இந்நோய்ப் பாதிப்பு அதிகம் இருக்கின்ற
பகுதிகளில், சுமார் 7 கோடிச் சிறாருக்கு பல தடவைகள் தடுப்பூசிகள் போடப்பட்டன என்றும்
WHO கூறியது