2012-01-11 15:23:47

பிரான்ஸ் நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே வாழும் அயல் நாட்டினர் வெளியேற்றம்


சன.11,2012. பிரான்ஸ் நாட்டில் சரியான ஆவணங்களின்றி, சட்டத்துக்குப் புறம்பே வாழும் வெளி நாட்டவரை வெளியேற்றுவதில் அந்நாட்டினர் அதிக ஆர்வம் காட்டுவதாக ஒரு புள்ளி விபர ஆய்வறிக்கை கூறுகிறது.
பிரான்சில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 32,912 பேர் வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்று அவ்வாய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் ருமேனியர்களின் எண்ணிக்கையே அதிகமெனவும், வெளிநாட்டவர்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கும் வசதி, கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 3.6 விழுக்காடு குறைந்திருக்கிறது எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நபரை மணந்து குடியுரிமை பெறுவதில் 2010ம் ஆண்டில் பெரிதும் தடைகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு 31 பேருக்கு இதில் தடை ஏற்படுத்தப்பட்டது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் சீர் குலைந்ததால் பிரான்சுக்கு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பலர் கருதுகின்றனர்.
பிரான்சில் சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஒரு சட்டம் உருவாகி, வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் தொகையைக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.