அனைத்துச் சூழல்களிலும் கிறிஸ்தவ சாட்சியாக விளங்குவதே தலையாயத் தேவை - கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள
பேராயர் ஆலஞ்சேரி
சன.09,2012. குடும்பங்களிலும், திருஅவை நிறுவனங்களிலும், அனைத்து மறைப்பணிகளிலும் கிறிஸ்தவ
சாட்சியாக விளங்குவதே இன்றைய மிகப்பெரும் தேவையாக உள்ளதாக அறிவித்தார் கர்தினாலாக திருத்தந்தையால்
அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி. கர்தினாலாக அறிவிக்கப்பட்டபின் ஆசிய
செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க திருஅவையின் தலைவர்
பேராயர் ஆலஞ்சேரி, கிறிஸ்தவ வாழ்வின் சாட்சியமும் செய்தியும் இவ்வுலகில் தன் உண்மையான
பிரசன்னத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இன்றைய மிக முக்கியத் தேவை என்றார். திருக்காட்சிப்
பெருவிழாவின் மூலம் உலகிற்குத் தன்னையே வெளிப்படுத்திய கிறிஸ்துவின் பிரசன்னம், திருஅவை
ஒன்றிப்பு, திருத்தந்தையுடன் கர்தினால்கள் கொண்டிருக்கும் ஒன்றிப்பு ஆகியவை மூலம் இவ்வுலகில்
தொடர்ந்து வெளிப்படுத்தப்படவேண்டும் என்று கூறிய பேராயர் ஆலஞ்சேரி, இதற்கென தான் மேலும்
அர்ப்பணத்துடன் உழைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.