பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் எகிப்தில் கிறிஸ்மஸ்
சன.07,2012. எகிப்தில் அரசுத்தலைவர் ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் முதன்
முறையாக பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இச்சனிக்கிழமை கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடினர்
அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள். அரசுத்தலைவர் முபாரக் பதவி விலகக் காரணமானப் போராட்டங்களைத்
தொடர்ந்து, அந்நாட்டில் சிறுபான்மையினர்க்கெதிரான வன்முறைகளும் இடம் பெற்று வருகின்றன.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் சனவரி 7ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றனர்.
எகிப்தின் சுமார் 8 கோடியே 50 இலட்சம் மக்களில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
இச்சனிக்கிழமை இப்பெருவிழாவைக் கொண்டாடிய கீழைரீதிக் கிறிஸ்தவர்களுக்குத் திருத்தந்தை
16ம் பெனடிக்டும் இவ்வெள்ளிக்கிழமை மூவேளை செப உரைக்குப் பின்னர் நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.